Thursday, April 19, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/04/1947) புதன்


ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்ப்பதிவர்களுக்கு  விருதுகளை அறிவித்து இருக்கின்றது...ஔவையார் விருதைப் பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ்த் தொண்டு செய்யும் திரு.ஜெட்லிசேகருக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திரு ஜெட்லி சேகருக்கு.






==============================


பெப்சி சங்கத்தை உடைத்தே தீருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள்.. நானும் வெயில் காலத்தில் பெப்சி சங்கத்தை உடைப்பது நியாயமல்ல என உதயகுமார் தலைமையில் கடும் போராட்டத்தில் இறங்கினேன். உடனே என்னையும் தலைவர் உதயகுமாரையும் இரண்டு நாள் கட்டி வைத்து அடித்தனர் .. இப்போது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுவிட்டார்கள்..பார்ப்போம் பொறுத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கின்றது என்று..கூறிக்கொண்டே வடை பெற்றோம்....சாரி விடை பெற்றோம்.


பின்பு அது சரியான விடையா என ஒரு டீச்சரிடம் கேட்டேன். டிக்கி பிளக்க பிளக்க பிரம்பால் அடித்து துரத்தினர்..




=====================================


பதிவர் விந்தை மனிதன் கூஜாராம் திருமணத்துக்கு என்னால் போக முடியவில்லை.. சரியாக  அதே நாளில் எனது அந்தை பையன் (விந்தை,அந்தை) ஆந்தை திருமண நிச்சயதார்த்தம் கடலூரில் நடந்த காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தில் காளான் பிரியாணி போட்டோம் நீதான் மிஸ் பண்ணி விட்டே என்று என்னை வெறுப்பேத்த கூஜாராம்  கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு இருக்கின்றதே... அவை கொடுமையான கணங்கள்.





==========================================


மிக்சர்
ஐபிஎல் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கி விட்டது.. பத்தாவது படிக்கும் பசங்களின் பெற்றோர்கள் வெறுத்து போய் இருக்கின்றார்கள்.. பத்தாவது படிக்கும் ஆம்பளை பசங்க இஞ்சி தின்ன குரங்கு(ஜெட்லி சேகர்) கணக்கா முகத்தை வச்சிகிட்டு புத்தகத்தை வச்சிகிட்டு படிக்கறது போல நடிக்கறானுங்க. இந்த விஷயத்தை என்னுடைய பக்கத்து வீட்டுப் பத்தாவது மாணவன் பட்பனாதன் அம்மாவிடம் போட்டு கொடுத்தேன்.. அன்றைய பொழுது சந்தோசமாக சென்றது.

==========================================


ஏண்டா சும்மாவே வீட்டுல இருக்க எதுனாச்சும் வேலைக்கு போலாம்ல என்று மாமியார் காலையில் விளக்குமாற்றால் அடித்து வீட்டைவிட்டு விரட்டினார் .
மெட்ரோரயில் பணிகள் காரணமாக சென்னை அசோக்பில்லரில் இருந்து கோயம்பேடு செல்வதற்குள் போதும் போது என்றாகிவிடுகின்றது...என்னைக்குத்தான் இந்த மெட்ரோரயில்பணிகள் முடியும் என்று ஏக்கமாகவும் கடுப்பாகவும்  இருக்கின்றது என்று வீட்டு வாசலில் நின்று மாமியாரிடம் கூறினேன்.. மறுபடியும் என்னை அடித்து துவைத்தார்.


மிருகவதை சட்டத்தில் அவரை சிறையில் அடைதிருக்கின்றனர் (முதல்வர் மம்மிக்கு எனது வாழ்த்துக்கள்)
==============================
சாம் தி டேக்கர்

Tuesday, April 10, 2012

அட்ரா சக்க சி பி செந்திகுமார் பேட்டி காமெடி கும்மி பாகம் 1

1.சி பி என்பதன் விளக்கம் ?    

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C  இனிஷியல்ல சேர்த்துட்டேன் ..  ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )


சா ஆ : சும்மா சொல்லாதிங்க பாஸ் ஸ்கூல்ல சிலுக்கு நடிச்ச பிட்டு படத்த பாத்து மாட்டிருப்பிங்க அதான் சிலுக்கு பிட்டு செந்தில் சி பி ஆகிடுச்சு ஹி ஹி ஹி 




2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்? 

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம் 



சா ஆ : அதுக்கப்புறமா முன்னாடி இருந்தவன் உங்க ரெண்டு பேத்தையும் வீடு வர வெரட்டி வெரட்டி அடிசிருப்பானே அத சொல்லல? ஹி ஹி ஹி 


3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?                                                       

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்.. 



சா ஆ :ஏன் உங்க அப்பா கால சதுர மற்றும் கால வட்ட படங்கள பாக்கலியா? அவ்வ்வ்வ்வ்




 
4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?  
பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில்  17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களுக்கும் எழுதி உள்ளேன்  

சா ஆ: ப்ளாக்ல எவனாவது படிக்க வாய்ப்பு இருக்கு சாவி அண்ட்  நியூ ஃபிலிமாலயா சுத்தம் ஹி ஹி ஹி 



5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?        

களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல  என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3  மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.அவர் வெயிட் பண்ணலாம்னார். ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்.


சா ஆ : அதுக்கப்புறமா கிட்டத்தட்ட எல்லா படங்கள்லயும் பல்பு வாங்குனத சொல்லவே இல்லையே..... 



6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?

 சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக  சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்.. 

சா ஆ : சப்ப மேட்டர் இப்படி மொக்க மேட்டர கோர்த்து உட்டன்களே அவ்வ்வ்வ் 

7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?                                                             

 எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி,  மகள்  என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்

சா ஆ: வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு....

நண்பர் “பன்னி-பக்ஸ்”

8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?    

 நான் கவுண்டமணி  ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே ப்ளாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றாண்டா மொக்கை என  திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ் 

சா ஆ:இப்பொ எதுக்கு மேட்ச் ஆகுதோ இல்லயோ உங்கள எல்லாரும் அடிச்சு சக்கயா புழிஞ்சு எடுக்குரதுக்கு அல்லது இனிமே புழிஞ்ஜு எடுக்குரதுக்கு இது சூப்பர் டைட்டில் பாஸ் 

9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?     

வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..

சா ஆ : அப்பு...அத நாங்க சொல்லோனும் நீங்களா சொல்லிக்க கூடாது... ஆமாஆந்த ஜோக்ஸ் எத்தன பேரு படிச்சிருப்பங்கன்னு நினைக்கிறீங்க ஒரு பய படிச்சிருக்கமாட்டான்

  10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?
  
நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள் ..ராமராஜன்,பவர் ஸ்டார் படங்கள்க்கு விமர்சனம் எழுதமாட்டேன்,ஹி ஹி 


சா ஆ : கிட்டத்தட்ட எல்லா விமர்சனங்களுமே மொக்கை தான் . ராமராஜன் பவர் ஸ்டார் நான்(சாம் ஆண்டர்சன்) எவ்வளவோ பரவாயில்லை

Indli