Sunday, October 30, 2011

வேலாயுதம் "வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்"

ஜெனிலியா ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிறார்.(அல்லது பரோட்டா  செய்கிறார்.) ஏதோ ஒரு எழவு வேலை செய்கிறார். உள்துறை அமைச்சரின் வீடு என்று தெரியாமல் இட்லி வியாபாரத்தில்  அவரும், அவரின் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள்.  அதில் ஜெனிலியாவின் நண்பர்கள் கொல்லப்பட, அந்த ரவுடிகள் மூலமாக சென்னையில் பல இடங்களில் இட்லி கடை  ஆரம்பிக்க போவதாய் தெரிகிறது. ஜெனிலியா கத்திக்குத்தோடு உயிர்பிழைக்கிறார். ஒரு கடையில் தோசைகள் கரிந்து போயிருக்க, அப்போது ஜெனிலியா தோசையை கருக்கியது “வேலாயுதம்” என்று கற்பனைப் பெயரை எழுதி வைக்க, அடுத்து நடக்கவிருக்கும் இட்லி கடை தொடங்கவிருக்கும் மேட்டரையும் எழுதி வைக்கிறார். 




இப்போது கிராமத்தில் தன் தங்கை மீது அதீத பாசமுள்ள அண்ணனாக விஜய். அப்பா அம்மா இல்லாமல் பிறந்த தன தங்கையை  பாசத்துடன் வளர்க்கிறார் விஜய். தங்கையின் திருமணத்திற்காக சென்னையின் ஒரு சமையல் மாஸ்டர் , புக் பண்ண  சென்னை வருகிறார். அடுத்தடுத்து தொடங்கப்படும் இட்லி கடைகள் எத்தேசையாய் அவருக்கே தெரியாமல் செயலிழக்கப்பட, வேலாயுதம் மக்களிடையே ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப் படுகிறான். விஜய்  ஜெனிலியாவிடம்  சமையல் காண்ட்ராக்டை ஒப்படைக்கிறார்    இது பற்றி தெரியாத விஜய் அப்பாவித்தனமாய் ஜாலியாய் சுற்ற, ஒரு கட்டத்தில் அவர் நம்பி பணம் கட்டியசமையல் மாஸ்டர் அட்வான்ஸ் பணம் திருப்பிகொடுக்காமல் ஏமாற்றிவிட, நொந்து போயிருக்கும் நேரத்தில் ஜெனிலியா மூலம் தன்னைத்தான் எல்லோரும் வேலாயுதம் என்று நம்பியிருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். பின்பு அவர் வேலாயுத அவதாரம் எடுத்தாரா? தங்கையின் திருமணம் நடந்ததா? அதில் ஜெனிலியா சமையல் செய்தாரா?வில்லனின் இட்லி கடை திட்டத்தை அழித்தாரா? என்பது போன்ற **** பைட்டிங் கேள்விகளுக்கு எல்லாம் பதில் வெண்திரையில். 

                                          சமையலுக்கு வரும் ஜெனீலியா மற்றும் விஜய் 
                                        

இப்படி இந்த படத்தை இவ்வளவு உத்து பார்த்ததில   இருந்தே நான் எவ்வளவு பெரிய விமர்சகன் அப்டிங்கறது   உங்களுக்கு தெரிந்திருக்கும்.விஜய் என்னுடைய இயக்கத்தில் நடிக்க ஆசைபட்டார் இப்போது நான் குறும்படம் பார்பதிலும். என்னுடைய நடிப்பு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் முயற்சி செய்து கொண்டு இருப்பதனால் என்னால் இயக்க முடியாது என்று சொல்லி விட்டேன் 

சுருக்கமாக சொல்வது என்றால் இது போன்ற மொக்கை படங்களை பார்க்கும் நேரத்தில் என்னால் நூறு முறை ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு நடித்து காட்ட முடியும் .... வேறு என்ன சொல்ல 


ஆங்... எங்க விட்டேன்.... சரி மீண்டும் வேலாயுதத்துக்கு வருவோம்  சரி அதுக்கென்ன பண்றது வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு. இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும். 

அப்புறம் ஹன்சிகா இந்த பெயரை தட்டச்ச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஜெர்க் ஆகி விடுவதால் இப்போதைக்கு அப்பீட் ஆகிறேன் 

என்னுடைய இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கும் எரிச்சல் வரும் அதற்க்கு என்னுடைய பதிலும் அதுவே "வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் "


நன்றிகளுடன்  

சாம் 

Tuesday, October 11, 2011

நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது?

இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.

வைகிங்  நிறுவனத்தின் லுல்லாஹ் எனும் ஜட்டி விளம்பரத்துக்காக வைகிங்  இவர்களுடன் சேர்ந்து இலவச ஜட்டி ட்ரையல், ஆளுக்கொரு செட்  இட்லி  வடை  ,போன்ற ஏற்பாடுகளுடன் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். சென்னையின் புதிய நட்சத்திர ஹோட்டலான கையேந்திபவனில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வந்திருந்த இருநூறு சொச்ச பதிவர்களுள் ராண்டமாய் செலக்ட் செய்யப்பட்ட சிலரின் அறிமுகப்படலத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களின் ஸ்பான்ஸர்களான லுல்லாஹ் ஜட்டியை பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சின்ன பேச்சும், என்று சுவாரஸ்யமாய் ஆக்க முயற்சித்தார்கள். மதியம் டீ பார்ட்டியில் அருமையான உணவுகள் பரிமாறப்பட்டன. சுவைத்து உண்டேன் அதிகமாக கேட்டேன் செருப்பால் 
அடித்தனர் ஓடிவந்து விட்டேன்  வழக்கமாக கொடுக்கும் இட்லி இல்லை
என்பதால் கடுப்பாக இருந்தேன்
நிகழ்வின் கடைசி விஷயமாய் lounge எனும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஐந்தாறு குழுவை ஏற்படுத்தி யார் யாருக்கு எதில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து கசமுசா செய்யலாம் என்பது போன்ற நிகழ்ச்சி அப்போது ஒவ்வொரு குழுவிற்குமான போர்டை எடுத்து வந்தார்கள். அதில் ஒரு போர்டை பார்த்தும், என்னுள் தாங்க முடியாத கோபம் வந்துவிட, உடனடியாய் அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். நாங்கள் சாப்பிடும்  இட்லி எந்த விதத்தில் குறைந்துவிட்டது. நீங்கள் எங்களுக்கு எப்படி தோசை வைக்கலாம் அதுவும் சட்னி இல்லாமல்?. என்று ஆரம்பித்து தொடர்ந்து என் கண்டணங்களை பதிவு செய்தவுடன், உடன் இருந்த பெரும்பாலான இட்லி வெறி உணர்வு கொண்ட தமிழ் இட்லி தின்னிகளும் சேர்ந்து எதிர்க்க, அந்த போர்டு எடுக்கப்பட்டது. பின்பு இட்லி தீர்த்து விட்டது என சாணியை கரைத்து ஊத்தினார் ஓடிவந்து விட்டேன் .
அவர்களை எந்த விதத்தில் தோசை போடா தூண்டியது என்றே புரியவில்லை. தமிழில் மட்டும் சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் மதியம் இட்லி சாப்பிடுகிறோம் . உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் ரீஜினல் உணவு இட்லி இரண்டாவது இடத்திலிருக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை. தோசை சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் எந்த பிராந்திய மொழிக்காரராய் இருந்தாலும் உலகம்  முழுவதும் பயன் படுத்தப்படும் மசாலா தோசையை(இந்த இடத்தில என் வாயிலிருந்து ஒழுகிய எச்சிலால் என் மானிடர் நனைகிறது) உண்பதால் சிறப்பானவர்கள் என்று அர்த்தமா?  எந்த விதத்தில் நாம் குறைந்து போய்விட்டோம்? இட்லில் இல்லாத வகைகளா? நாம் இட்லி சாப்பிடுவதற்கே இட்லிபொடி எனும் ஒரு விஷயத்தை பயன்படுத்தி, அதை தொட்டு உண்பவர்கள் நாம்.
மீண்டும் அதிகமாக சப்தம் போட்டதால் வேலைக்காரி தொடப்பக்கடயால் அடித்து விரட்டினால் ஆனாலும்  நான் ஓடவில்லை என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்
அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக


டிஸ்கி : இதில் இருப்பது கடைசியாக எனக்கு இட்லி சுட்டு தந்த துணி


என்னை வெறுப்பேற்றிய போர்டு
.
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

Indli